-
Balisamiyin thuppu by Thiru Devan
“பல்லிசாமியின் துப்பு” என்கிற தலைப்பைப் பார்த்தவுடன் இதுவும் துப்பறியும் சாம்புவைப் போன்று ஒரு நகைச்சுவைச் சிறுகதைத் தொகுப்பாக இருக்கும் என நினைத்தேன். முதல் சில சிறுகதைகளைப் படித்தவுடனேத் தெரிந்துவிட்டது என் கணிப்பு தவறு என்று. தமிழில் வந்த நகைச்சுவைக் கதைகளில் இன்றும் அதிகமாக பேசப்படுவது எழுத்தாளர் தேவன் அவர்களின் “துப்பறியும் சாம்பு“. அதில் ஒரு ஆஃபிஸ் குமாஸ்தாவாய் இருந்தவர் தனது திடீர் அதிர்ஷ்டத்தால், மற்றவர்களால், கண்டுப்பிடிக்க முடியாத பலத் திருட்டுக்களை சுலபமாகத் துப்புத்துலக்கி விடுவார். என் பையன் குழந்தையாக இருந்தப் போது அவனுக்கு இந்தக் கதைகள் மிகப் பிடிக்கும், பல நாட்கள் புதுக் கதைகளை நானே என் கற்பனையில் இட்டுக்கட்டிச் சொல்வேன். ஆனந்த விகடனில் பல ஆண்டுகள் (1942-1957) நிர்வாக ஆசிரியராக இருந்தார் திரு தேவன் அவர்கள். தமது நாற்பத்து நான்கு வயதிலேயே இறைவனடி எய்தினார், சுமார் இருபது ஆண்டுகளிலேயே எப்படி இவ்வளவு கதைப் படைப்புகளை அவரால் எழுத முடிந்தது என்பது ஆச்சரியம் தான். அல்லயன்ஸ் கம்பெனி வெளியீடானப் “பல்லிசாமியின் துப்பு” சிறுகதைத் தொகுப்பில் முதலில்…
-
Azhage song in Saivam makes me emotional
இந்த காட்சியை பார்க்கும் போதெல்லாம் என்னை அறியாமல் என் கண்கள் கலங்கிவிடும். பல முறைப் பார்த்திருக்கிறேன், பல நாட்களுக்கு பின் இன்றுப் பார்த்தப் போதும் அப்படித் தான். சைவம் (2014) என்ற இந்தப் படத்தில், அழகே என்கிற அருமையானப் பாடலில் வரும் ஒரு எளிமையானக் காட்சி தான் அது. குழந்தையில்லை என்று ஏற்கனவே வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தம்பதிகளிடம், அவர்களைப் பார்க்கின்ற எல்லோரும் யதார்த்தமாகக் கேட்கும் கேள்வி தான், உங்களுக்கு எவ்வளவு குழந்தைகள் என்று. இந்தக் கேள்வி அந்தத் தம்பதிகளை எந்தளவு காயப்படுத்தும் என்பதை இயக்குனர் விஜய் ஆழமாகக் காட்டியிருப்பார். அந்தத் தம்பதிகளைக் காப்பாற்றும் விதமாக, அவர்களின் உறவுக்கார குட்டிப் பெண்ணாக வரும் ‘தேவதை’ சாரா அர்ஜூன், ‘அம்மா’ என்றுக் கூப்பிடுவாள். அந்த ஒரு நொடி என்னை ஏனோ உலுக்கிவிடும். #saivam #azhage #couples #WithNochildren
-
Kadalukku Appaal by Pa.Singaram
கடந்துவிட்ட வேறொரு நூற்றாண்டிற்குச் சென்று அந்தச் சூழலில் வாழ வேண்டுமென்றால் அறிவியலால் காலக் கப்பலேதையும் தரமுடியாது, ஆனால் அதற்கு மாற்றாக அந்தக் காலத்தில் வாழ்ந்த திறமையான எழுத்தாளர்களின் படைப்புகளால் முடியும். அப்படியான ஒரு புதினம் தான் திரு ப.சிங்காரம் அவர்கள் 1950 இல் எழுதிய “கடலுக்கு அப்பால்”. என்ன ஒரு மகத்தான படைப்பு இது! முதல் வரியிலேயே 1945 இல் தமிழர்கள், அதுவும் செட்டிமார்கள் கொடிகட்டிப் பறந்த மலேயா நாட்டின் பினாங்கு நகரத்திற்கு நம்மைப் புலம் பெயர்த்து, அங்கேயே வசிக்க வைக்கிறார் ஆசிரியர். ஆங்கிலேயர்கள் வசம் இருந்து, ஜப்பானியர்களிடம் சென்று, ஆங்கிலேயர்களிடமே திரும்பும் சூழ்நிலையில் (1941-1945) செல்கிறது கதை. பினாங்கு நியூ லைன் வீதியில், போருக்கு முன்பு பினாங்கு தெருவிலும் “லேவாதேவி”, அதாவது வட்டித் தொழில், செய்துக் கொண்டிருக்கும் வானாயீனா என்கிற ஆ.சி.வயி.வயிரமுத்துப் பிள்ளையவர்களின் மார்க்காவில் “அடுத்தாள்” (மேலாள் என்கிற மேனேஜருக்கு கீழே இருக்கும் ஆள், பெட்டியடிப் பையங்களுக்கு மேலே இருப்பவன்) வேலையில் இருக்கும் “செல்லையா” என்பவன் தான் கதையின் நாயகன். கதை ஆரம்பிக்கும் போது…
-
Dummies Drama Minmanigal – Karthik Fine Arts
டம்மீஸ் டிராமா நாடகக்குழுவின் மின்மணிகள் நாடகம், கார்த்திக் பைன் ஆர்ட்ஸால் இன்று நாரத காண சபாவில் அரங்கேறியது. ஒருவரிக் கதையை வைத்து ஒரு முழு நாடகத்தையும், நன்றாக இயக்கியுள்ளார் திரு பிரசன்னா. கோவிந்த் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் பொறியாளர், அவனுக்கு அன்பான பெற்றோர்கள்.கோவிந்துக்கும் அவர்கள் மீது அதித பாசம். எல்லா மென்பொருள் பொறியாளர்கள் போல் அவனுக்கும் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டும் என்று ஆவல், அவனின் பெற்றோருக்கும் பையன் வெளிநாட்டில் இருக்கிறான், அங்கிருந்து இதை அனுப்பினான், அங்கே பல இடங்களுக்குச் சென்று அனுப்பிய படங்கள் இவை, என்று காட்டி பெருமைப்பட ஆசை. இவனுக்கு வர வேண்டிய ஒரு ‘பாரிஸ்’ பயண நியமனம், இவன் எதிர்ப்பார்த்த மாதிரி அமையவில்லை. அதை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பது தான் கதை. நாடகம் நகைச்சுவையாக செல்கிறது, பல இடங்கள் சிரிக்கும்படி இருந்தது, வசனங்கள் காலத்திற்குப் பொருத்தமாக நன்றாக இருந்தது. கோவிந்தாக வந்த இளைஞரும், மின்சார வாரிய ஆனந்தன், லிங்கம் கதாபாத்திரத்தில் வந்தவர்களும், பெற்றோராக வந்தவர்களும் நன்றாக நடித்திருந்தார்கள். கதையில் தமிழ்நாடு மின்சார…
-
Maskless and nonstop eating
ஒருவரால் இவ்வளவு சாப்பிட முடியமா? தற்போது அதிகமாகப் பேசப்படும், “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” படத்தை இன்று ஜாஸ் சினிமாஸில் பார்த்தேன் [படத்தின் விமர்சனம் அடுத்த பதிவில்]. எனக்கு வலதில் இருந்த முப்பது வயது இளைஞர், அவரை ‘அன்பு’ என்று அழைக்கலாம், எனக்கு முன்பே வந்திருந்தார். அன்பை தாண்டிப் போய் அமர்ந்தேன். நான் எப்போதும் போல், என்-95 மாஸ்க் அணிந்திருந்தேன். அன்பு மாஸ்க் எதுவும் அணியவில்லை, போடச் சொல்லி வேண்டலாம் என்று சொல்ல முற்பட்டேன், அப்போது குனிந்து பாப்கான் பொட்டலத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்தார். சரி, சாப்பிடுபவர் மாஸ்க் போட முடியாது, சாப்பிடுபவரை நிறுத்த சொல்வது (தமிழர்) பண்பாடு இல்லை என்று தயங்கி மௌனமானேன், இன்னும் ஓர் ஐந்து நிமிடத்தில் முடித்துவிடுவார் என்று நினைத்தேன். ஒரு மணி நேரமாகியும் அவர் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தார், நடுநடுவில் கோக் பானம் வேறு, அதைச் சத்தம் போட்டு வேறு உறிஞ்சினார், பெரிய பெரிய கொட்டாவி, ஏப்பம் வேறு, எல்லாம் நிர்வாணமான வாயை வைத்து. எனக்கா என்னைச் சுற்றி வைரஸ் வைரஸா சுற்றுவதுப்…