அம்மா வந்தாள் – திரு தி. ஜானகிராமன் இதற்கு முன் நான் எழுத்தாளர் தி. ஜானகிராமன் அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர அவரின் ஒன்பது நாவல்களில் எதையுமே படித்ததில்லை. அவரின் “மோகமுள்” புதினம் 1995ஆம் ஆண்டு திரைப்படமாக வந்தப் போது பார்த்துள்ளேன், அப்போதே அவரின் படைப்புகளைப் படித்திருக்க வேண்டும், தவறவிட்டேன். கடந்த சில வாரங்களாகத் தனது பேஸ்புக் பக்கத்தில் நண்பர் திரு மாலன் அவர்கள் தி.ஜாவின் நூற்றாண்டு நினைவாக அவரின் படைப்புகளிலிருந்து பல முத்துக்களைப் பகிர்ந்து வருகிறார். அதில் கவரப்பட்டு தி.ஜாவின் “அம்மா வந்தாள்” நாவலை கிண்டிலில் வாங்கிப் படித்தேன். இரண்டு நாட்களாக அதில் வந்த கதாப்பாத்திரங்களும், ஊரும் தான் என் நினைவிலும் கனவிலும் வருகிறது, அந்தளவு என்னைப் பாதித்துவிட்டது. கதை ஆரம்பிப்பது சித்தன்குளத்துக் காவேரி கரையில். அந்த முதல் பத்தியிலேயே நம்மைக் கட்டிப் போட்டுவிடுகிறார் தி.ஜா, என்ன உவமைப் பாருங்கள். // சரஸ்வதி பூஜையன்று புத்தகம் படிக்கக் கூடாது என்பார்கள். ஆனால்,…
நகரத்தில் (சென்னை) பிறந்து, இங்கேயே வளர்ந்து, சொந்த ஊரின் தொடர்புகள் இல்லாமல் இருக்கும் பலரைப் போன்றவன் நான், அதனால் தான் என்னவோ தமிழ் நாட்டில் முழுவதும் இருக்கும் எண்ணற்ற ஊர் தெய்வங்களை, காவல் தெய்வங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஐயனார், மதுரைவீரன், பாடிகார்ட் முனீஸ்வரர் போன்றவர்களை கேள்விப்பட்டதோடு சரி, அதற்கு மேல் தெரிந்ததெல்லாம் தமிழ்…
நண்பர் திரு கோபு அவர்களின் பரிந்துரையில் எழுத்தாளர் திரு புதுமைப்பித்தன் அவர்கள் 1943இல் எழுதிய “கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்” என்ற சிறுகதையை இன்று படித்தேன். சுமார் 23 பக்கங்கள் இருக்கும் இந்தச் சிறுகதை இலவசமாக விக்கிப்பீடியாவில் மற்றும் வெப்-ஆர்கைவ்யில் கிடைக்கிறது (PDF ebook) . சித்த வைத்தியம் மற்றும் சித்த வைத்திய பத்திரிக்கை ஒன்றை நடத்தும்…
“நாரத ராமாயணம்” என்ற இந்நூல் 1955இல் எழுத்தாளர் திரு புதுமைப்பித்தன் அவர்களால் எழுதப்பட்டு பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது (2020) அமேசான் கிண்டில் பதிப்பாக வந்திருக்கிறது. இது ஒரு பகடி நூல் என்பதை நினைவில் வைத்துப் படிக்க வேண்டும். இராமாயணம் ஒவ்வொரு பிரதேசத்திலும், மொழியிலும் பல்வேறு விதமாக சொல்லப்பட்டுள்ளது, அவற்றில் நான் படித்த சில: திரு.பழ.கருப்பையா எழுதியுள்ள எல்லைகள் இல்லா இராம காதை, Sita: An Illustrated Retelling of Ramayana by Devdutt Pattanaik, Sita’s Ascent by Vayu Naidu, and, Scion of Ikshvaku by Amish Tripathi. இருந்தும் ராமாயணத்தை இப்படியும் தொடர்ந்து, சமக்கால அரசியல் விசயங்களோடு இணைக்க முடியுமா என்பதில் எழுத்தாளர் நம்மை அசத்துகிறார். புத்தகத்தின் ஆசிரியர் குறிப்பு இப்படி ஆரம்பிக்கிறது: //கொஞ்ச நாட்களுக்கு முன், சுற்றுப் பிரயாணமாக நான் சீன தேசத்திற்குச் சென்றிருந்தேன். ஒரு நாள் ஹோ-யாங்-ஷே என்ற சிறு கிராமத்தில் தங்க நேர்ந்தது.…