-
Aval Peyar Sakthi drama by Karthik Fine Arts
கோமல் தியேட்டர் நாடகக்குழுவின் “அவள் பெயர் சக்தி” நாடகம், கார்த்திக் பைன் ஆர்ட்ஸின் இந்த ஆண்டு கோடை நாடக விழாவின் இறுதி நாடகமாக நாரத காண சபாவில் அரங்கேறியது, நன்றாகயிருந்தது. திருமதி தாரிணி கோமல் (Dharini Komal) எழுதி, இயக்கியிருந்தார். நான்கு தலைமுறை பெண்களை மையமாக வைத்து, இன்றையக் காலத்துக் குடும்பப் பிரச்சனைகளை அலசுகிறது நாடகம். சென்னையில் வசிக்கும் அன்பான கணவன் மனைவிக்கு இரண்டு மகள்கள், ஒரு வயதான பாசக்கார அம்மா. குடும்பத்தையும், குழந்தைகளையும் முழுவதும் அம்மாதான் பார்த்துக்கொள்கிறார், இதனால் மருமகளால் வேலைக்குப் போய் வர முடிகிறது, மகனாலும் தன் தொழிலில் வெற்றிப்பெற முடிகிறது. பெரிய பெண் ஜனனிக்கு, திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகிறது, கணவன் கார்த்திக், அவர்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தை (அதித்தி) – இருவரும் நல்ல வேலையில் இருக்கிறார்கள், பெரியப் பதவிகள் என்பதால் இருவருக்குமே அதிக வேலைப்பளு. அதுவும் கார்த்திக் சதா வேலை வேலையென்று இருக்கிறான் – குழந்தையும், வீட்டையும் கவனிக்கும் பொறுப்பு முழுவதும் ஜனனி தலையில் விழுகிறது. உதவிக்கு இருவரின்…
-
Dummies Drama Minmanigal – Karthik Fine Arts
டம்மீஸ் டிராமா நாடகக்குழுவின் மின்மணிகள் நாடகம், கார்த்திக் பைன் ஆர்ட்ஸால் இன்று நாரத காண சபாவில் அரங்கேறியது. ஒருவரிக் கதையை வைத்து ஒரு முழு நாடகத்தையும், நன்றாக இயக்கியுள்ளார் திரு பிரசன்னா. கோவிந்த் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் பொறியாளர், அவனுக்கு அன்பான பெற்றோர்கள்.கோவிந்துக்கும் அவர்கள் மீது அதித பாசம். எல்லா மென்பொருள் பொறியாளர்கள் போல் அவனுக்கும் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டும் என்று ஆவல், அவனின் பெற்றோருக்கும் பையன் வெளிநாட்டில் இருக்கிறான், அங்கிருந்து இதை அனுப்பினான், அங்கே பல இடங்களுக்குச் சென்று அனுப்பிய படங்கள் இவை, என்று காட்டி பெருமைப்பட ஆசை. இவனுக்கு வர வேண்டிய ஒரு ‘பாரிஸ்’ பயண நியமனம், இவன் எதிர்ப்பார்த்த மாதிரி அமையவில்லை. அதை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பது தான் கதை. நாடகம் நகைச்சுவையாக செல்கிறது, பல இடங்கள் சிரிக்கும்படி இருந்தது, வசனங்கள் காலத்திற்குப் பொருத்தமாக நன்றாக இருந்தது. கோவிந்தாக வந்த இளைஞரும், மின்சார வாரிய ஆனந்தன், லிங்கம் கதாபாத்திரத்தில் வந்தவர்களும், பெற்றோராக வந்தவர்களும் நன்றாக நடித்திருந்தார்கள். கதையில் தமிழ்நாடு மின்சார…
-
Jodi Porutham
தமிழ் காமெடி நாடகங்கள் அதுவும் எஸ்.வி.சேகர் மற்றும் கிரேஸி மோகன் அவர்களின் நாடகங்கள் எனக்கு மிகப் பிடிக்கும். பல நூறு முறைகள் அவற்றை நான் ஒலிநாடாவில் (இப்போது டிஜிட்டல்) கேட்டிருக்கிறேன். இப்போதும் கூட, கடினமான ஒரு நாளின் முடிவில், விட்டிற்குத் திரும்ப வரும் போது, மனதை லேசாக, அவற்றில் ஏதாவது ஒன்றை காரில் கேட்டுச் சிரித்துக் கொண்டு வருவேன். அந்த வரிசையில் சற்று வித்தியாசமான ஒரு நகைச்சுவை நாடகம், 90களில் வெளிவந்த ஜோடிப்பொருத்தம் (Jodi Porutham). பல ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் கேட்டேன், திரும்பவும் மகிழ்ந்தேன், சிரித்தேன். டி.வி.வரதராஜன் (T.V.Varadharajen) மற்றும் நித்யா நடித்துள்ள இந்த நாடகத்தின் கதை வசனம் ரவி அவர்கள், இயக்கம் எஸ்.வி.சேகர் (S.Ve.Shekar). டி.வி.வரதராஜன் மற்றும் நித்யா, இருவருக்கும் ஒருவரை ஒருவருக்குப் பிடிக்கும், ஆனால் யார் சொல்வது என்ற வரட்டுக் கௌரவத்தினால், பார்க்கும் போதெல்லாம் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள், இந்த நிலையில் எஸ்.வி.சேகர் அவர்களைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியான “ஜோடிப்பொருத்தம்” என்பதில் தம்பதிகளாக நடிக்க வைத்து விடுவார். அதில் வரும் குழப்பம்…
-
Homemaker – Tamil Play by Shraddha
I have been a regular to Shraddha Theatres plays in Tamil for the last many years. Today, they had the first show of their new play “Home Maker” written by Anand Raghav. It was about how the woman of the house, the housewife, sacrifices her dreams and plays an important role in the well-being of the family. She cooks, teaches, manages the finance, procures supplies, nurses the sick and much much more. Yet, her role is not appreciated by her own spouse, or respected by her children, for many working in a job and earning is the only sign of success in life. In this play, we see one such…
-
Thuglak Darbar
I am an admirer of the works of the legendary Tamil political satirist, Magazine Editor and Actor “Cho Ramaswamy“. I should’ve heard and watched his most popular satirical comedy Muhammad bin Tughluq (முகமது பின் துக்ளக்) more times than I can remember, I know the dialogues by heart! So, I was intrigued when I read about a new play “Thuglak Darbar” (துக்ளக் தர்பார்) written by Thuglak Sathya (துக்ளக் சத்யா) and went to watch the debut staging today at the Narada Gana Sabha. It was produced by United Visuals, Directed and Acted by T.V. Varadharajen. The story goes like this – “Cho” in heaven is worried about the upcoming Indian Parliamentary elections and…
-
Koothu Patarai – Tamil play – Kaalam Kalamaga
சமீபத்தில் காலமான “பத்ம ஸ்ரீ” திரு ந. முத்துசாமி நவீன தமிழ் நாடகங்களின் தந்தை எனக் கூறலாம். அவரின் “கூத்துப்பட்டறை” என்ற நாடக கலை அமைப்பு மிகப் பிரபலம். நடிகர் “விஜய் சேதுபதி” போல, இங்கே இருந்து வந்தவர்கள் பலர் தமிழ் சினிமாவில் பிரபலமாகியுள்ளனர். இதுவரை ஐயா ந. முத்துசாமி அவரின் நாடகங்களை நான் பார்த்ததில்லை. அந்த குறை இன்று தீர்ந்தது. 1968யில் ‘நடை’ என்ற இதழில் வெளிவந்த அவரின் முதல் நாடகமான “காலம் காலமாக”, அவரின் மாணவர்களால், இன்று ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடப்பது தெரிந்து, போய் பார்த்தேன். அபாரம்! நாடகத்தின் கதை என்பது தற்கால வாழ்க்கை, சமூகத்தைப் பற்றிய ஒரு விதமான நையாண்டி. ஒரு மருத்துவமனை, அங்கே ஒரு நோயாளியை மோசமான நிலையில் இருவர் தூக்கிக் கொண்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவன் பணக்காரன் போல, இன்னொருவன் உள்ளூர் அரசியல்வாதிப் போல இருக்கிறான். இருவரும் இவர்களுக்கு முன் இங்கே வந்து போனவர்களை முட்டாள்கள் என்று ஏளனம் செய்கிறார்கள். இவர்களுக்கு பின் இன்னொரு நோயாளியும் பரிதாபமான நிலையில் வருகிறான். ஏற்கனவே அங்கே வேறு இருவர் ஓரமாக…
-
3-Ji by YGM
In the Tamil stage play scene, Y.Gee.Mahendra is a celebrity and the troupe UAA (United Amateur Association) started by his late father Sri Y.G.Parthasarathy has been entertaining its audience for 66 years, certainly no small feat! Yesterday they released their 67th play titled “3 Ji” (3 ஜி – ஆவி வந்த நாடகம்), a political comedy. The play is about an election for office bearers that’s happening in a local apartment complex, the twist is that the two contestants are being helped by Gandhiji and Netaji in their intangible forms. Y.Gee. Mahendra rocks the stage as “Damuji, the security guard of the apartment, who later turns into a successful politician – his dialogues…
-
Nam Samayalaraiyil
Shraddha Theatres, a theatre group in Chennai is known for their innovation with the scripts they choose and their execution – introducing something different in each of their theatre plays. This time, they have taken the inconspicuous Kitchen(s) in our households and told the family drama and sentiment that happens around it. Their new play Nam Samayalaraiyil (நம் சமையலறையில்) that was staged today is an anthology of four stories (நான்கு குறு நாடகங்கள்), each of them has Kitchen and Cooking as the background. தமிழில் வந்த சமையல் புத்தகங்களில் எஸ். மீனாட்சி அம்மாள் அவர்களின் “சமைத்துப் பார்” அரை நூறாண்டுகளுக்கு மேலாக மிகப் பிரபலம். அதைத் தொடர்ந்து, என் தந்தை – லிப்கோவின் “சமைப்பது எப்படி” என்ற, என் அத்தை எழுதிய சைவ…