நவராத்திரிக்கு வீட்டுக்கு வரும் விருந்தினருக்குச் சுண்டல் தான் கொடுக்க வேண்டுமா? வித்தியாசமாகச் செய்யலாம் என்று, ஸ்விக்கி மூலம் ஒரு மாதிரிக்காக கிரீக் சாலட் (காய்க்கலவை) தருவித்தேன். அதைக் காட்டி யோசனையைச் சொல்ல ஆரம்பிக்க மனைவி கடுப்பாகி விட்டாள். சத்தம் போடாமல் கிரீக் சாலட்டை கையில் எடுத்து மொட்டைமாடிக்கு வந்து, உணவு வீணாகக் கூடாது என்பதால் சாப்பிட்டு விட்டேன். கீழே போகலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருக்கிறேன்!
இப்பொழுதெல்லாம் கொலுவுக்கு வீட்டுக்கு வரும் விருந்தினர்களில் பெரும்பலனோர் எது சாப்பிடக் கொடுத்தாலும் வேண்டாம் என்று நழுவிக் கொள்கிறார்கள், ஏன்?
Disclosure: I write reviews about products that I have bought for my usage and paid in full. There were no sponsorship or advertisement, or commission of any sort involved in this post.
Comments