இன்று திருச்செந்தூர் முருகர் கோயிலுக்குச் சென்றிருந்த போது பிராகாரத்தில் இந்த ஓவியங்களைப் பார்த்தேன். அதில் டச் படையெடுப்பின்போது கோயிலில் இருந்த முருகன் சிலையையும், நடராஜர் சிலையையும் தங்கம் என்று எண்ணி டச்சுக்காரர்கள் கைப்பற்றி எடுத்துச் சென்றது பற்றியும், அதை எப்படி நாயக்கர் உதவியோடு உள்ளூர் மக்கள் மீட்டனர் என்றும் இருந்தது.
இந்த நிகழ்வு நான் அறிந்திராத ஒன்று, இந்த நிகழ்வைப் பற்றி விக்கி தளத்தில் விரிவாக இருக்கிறது. ஐரோப்பியர்கள் இந்தியாவின் மீது படை எடுத்தது என்றாலே நமக்கு ஆங்கிலேயர்களைப் பற்றி தான் நினைவிற்கு வரும், அவர்களுக்கு முன்பே போர்ச்சுகீஸ்காரர்களும், டச்சுக்காரர்களும் வந்து நம் செல்வங்களைச் சூறையாடி சென்றிருக்கிறார்கள் என்பதை இது போன்ற இடங்களுக்குச் செல்லும்போது தான், நாம் தெரிந்து கொள்கிறோம்.
“வரலாறு மிக முக்கியம் அமைச்சரே” என்று வேடிக்கையாக நடிகர் வடிவேலு கூறுவது தான் நினைவிற்கு வருகிறது!
திருச்செந்தூர் கோயிலில் உள்ள சண்முகர் நடராஜர் சிலைகளை டச்சுக்காரர்கள் கொள்ளையடித்துச் சென்ற வரலாறு:
Footnote: A friend of mine and a reader of this blog, pointed out that in the above paintings the flag shown is incorrect. Instead of showing the Dutch (Netherlands) flag, the artist has drawn the French flag – both have same three colours (Red, White & Blue) but the orientation is different!
Technology advisor, professional speaker, and CEO coach. Also a Geek, Book worm, Movie lover, Traveller, Indian and தமிழன். Profile at tncv.me and Microsoft Community.
தி.ந.ச.வெங்கடரங்கன் மென்பொருள் வல்லுனர், ஆலோசகர்; தொழில்முறை பேச்சாளர்; தலைமை நிர்வாகிகளின் பயிற்சியாளர்.
Are there paintings on impalement ?
I am not sure.
Great write up with details…hope there are few more pictures which if possible you can share via a shared drive.