உலகயே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட்-19 (Coronavirus) வைரஸ் விஷயத்தில், இதுவரை நல்ல செய்திகள் இல்லை! இன்று தமிழ் இந்து திசையில் திரு கு.கணேசன், பொதுநல மருத்துவர் அவர்கள் எழுதியுள்ள இந்தக் கட்டுரை ஓரளவுக்கு நம்பிக்கை தருகிறது.

எந்தொரு வைரஸ் தொற்றையும் (Chicken Pox-சின்னம்மை, Polio-இளம் பிள்ளை வாதம் போன்று) முறியடிக்க மனிதக்குலத்திடம் இப்போதைக்கு இருக்கும் பெரிய ஆயுதம், தடுப்பூசிகள் தான். கோவிட்-19க்கு இப்படியான ஒன்றைக் கண்டுப்பிடிக்க ஒரு வருடத்திற்கு மேல் ஆகும், அதற்குள் நமக்கு இந்தக் கொடிய நோயைக் கட்டுப்படுத்த மாற்று வழிமுறைகள் உடனடியாக தேவை. அப்படியான இரண்டு வழிகளை திரு கு.கணேசன் குறிப்பிட்டுள்ளார், அவை தான் கொஞ்சம் நிம்மதிக் கொடுக்கின்றன. அவர் சொல்லியுள்ள “புதிய” (பரிசோதனையில் இருக்கும் அவசரக்கால) முறைகள்:

//1) ‘கோவிட்-19’ காய்ச்சலிலிருந்து மீண்ட நோயாளிகளின் ரத்தத்தைப் பெற்று, அதிலிருந்து ‘பிளாஸ்மா’ என்னும் திரவத்தைப் பிரித்தெடுத்து, மோசமான கட்டத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த புதிய நோயாளிகளுக்குச் செலுத்தினார்கள். இப்படிச் செலுத்தப்பட்ட பிளாஸ்மாவில் ‘கோவிட்-19’ கிருமிகளை முறியடிக்கும் நோயெதிர்ப்பொருட்கள் கோடிக்கணக்கில் இருந்த காரணத்தால், அந்த நோயாளிகள் ஆபத்தான கட்டத்திலிருந்து மீண்டார்கள்.

2) தற்போது ‘ஃபேவிலாவிர்’ (Favilavir) மருந்தைக் கொடுத்தால் ‘கோவிட்-19’ காய்ச்சல் கட்டுப்படுகிறது என்பதும் தெரியவந்துள்ளது. //

Madras Eye:

Along with the (deadly) coronavirus global emergency to worry about, we have a simpler infection at hand to prevent in Chennai (India).

Conjunctivitis aka Madras Eye infection is back. Last month I went through the suffering, along with a cousin sister (who was visiting from the USA) & my mom: who brought it first to our house this season!

Dr Vasumathy Vedantham, mentioned in this article in The Times of India is my cousin sister. She is a leading ophthalmologist in Tamil Nadu, and runs Radhatri Nethralaya hospital in T.Nagar. Proud of you my sis, you rock!

#PinkEye #COVID19 #Coronavirus

Update 15th April 2021:

The Pandemic hasn’t gone anywhere, it is entrenched with humanity for over a year and the current second wave in India is more deadly than the first with no sight of an end. Vaccines have come but their impact has been limited due to the large population of the country. I hope and pray the pandemic ends soon.

போன ஜனவரியில் சீனாவில் இந்தப் பெருந்தொற்று ஆரம்பித்ததில் இருந்து தெளிவான விளக்கங்களை புரியும் நடையில், படிப்பவரைப் பயமுறுத்தாமல் தமிழ் இந்து நாளிதழில் எழுதிவருகிறார் மருத்துவர் கு.கணேசன். தினம் வரும் புதிய விஞ்ஞான தரவுகளை உள்வாங்கி, நடைமுறையில் நோயாளிகளிடம் பார்ப்பதையும் நம்மோடு பகிர்கிறார். அறிவியல் சொற்களை (உதாரணம்: ACE2 Protein Receptors – புரத ஏற்பிகள்) எளிய தமிழில் எழுதுகிறார். வரும் மாதங்களில் இந்த பெருந்தொற்று எந்த திசையில் போகும் என்பதைப் பற்றி அவரின் பகிர்வுகள் சரியாகத் தான் இருந்திருக்கிறது. அவருக்கு பாராட்டுக்கள், நன்றிகள்.

கரோனா 2.0: ஒளிந்து வரும் ஆபத்து.. எச்சரிக்கை அவசியம்..

கரோனா 2.0: ஒளிந்து வரும் ஆபத்து.. எச்சரிக்கை அவசியம்..

 

Categorized in:

Tagged in:

, ,