இன்று, வீட்டிலிருக்கும் என் நூலகத்திலிருந்து எதையோ எடுக்கும் போது, கண்ணில்பட்டது இது.

2010இல் உலகத் தமிழ் செம்மொழி (கோவை) மாநாட்டின் சிறப்பு அஞ்சலகத்திலிருந்து என் மகனுக்கு நான் அனுப்பிய சிறப்புத் தபால் அட்டை. நிறையவே கசங்கியிருந்தது, உடனே அதைச் சமன்படுத்தி, கடைக்குப் போய் கண்ணாடி சட்டம் அடித்துவிட்டேன். இனி இது பாதுகாப்பாக என் அறையின் சுவரில் இருக்கும்.
அந்த மாநாட்டோடு நடந்த இணைய மாநாட்டின் குழுவில் இருந்ததில் பல அனுபவங்கள் நெஞ்சில் வந்து சென்றது. அப்போது வழங்கிய கேடயத்தைத்தோடு, இந்தத் தபால் அட்டையை நான் விலைமதிப்பற்றதாக உணர்கிறேன்.

Here is the blog post I wrote just after the TI2010 conference got over with links to photographs from the event.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

