நேற்று இரவு ஒரு டின்னரை முடித்துவிட்டு, நானும் எனது விருந்தாளியும் காரில் ராதாகிருஷ்ணன் சாலையில் வந்துக் கொண்டிருந்தோம். மணி சுமார், 11:30pm இருக்கும், நான் தான் ஒட்டுனர். சாலை குறுக்கே பல காவல்துறையினர், வரும் ஒவ்வொரு காரையும் நிறுத்தி சோதனை செய்துக்கொண்டிருந்தனர். எனது காரை நிறுத்திய ஒரு காவலர், மிகப் பவ்வியமாக “சார், கோவிச்சுக்காதிங்க வாய கொஞ்சம் ஊதரிங்களா?”. அவர் கேட்டவிதம் எனக்கு அச்சரியம், சென்னை காவலர இவர்!.
கதையை தொடர, ஊதினேன், “ஒன்றுமில்லை, போலாம் சார்” என்று என் காரை அனுப்பிவைத்தார்.