இன்று தமிழ் ஆசிரியர் திரு.பெ.கி.பிரபாகரன் ஐயா அவர்களைப் பார்த்தப் போது தான் அவரின் தூண்டுதலில் நாங்கள் பதினொன்றாம் வகுப்பில் எடுத்தப் பேட்டி பள்ளி இதழில் வந்தது நினைவிற்கு வந்தது. அதை தேடி எடுத்தேன்.
இப்போது தான் மத்திய அரசில் பெண்கள் இட ஒதுக்கீடு என்று பேசுகிறார்கள், ஆனால் சார்க் நாடுகள் 1991ம் ஆண்டே பெண் குழங்தைகள் ஆண்டாக அறிவித்திருந்தது. இதைப் பற்றி மக்கள் சமுதாயத்திற்காகப் பாடுபடும் நல்லோர்களின் கருத்தையறிய முற்பட்டோம். எங்கள் பள்ளி செயலாளர், முதல்வர், கவிஞர் பொன்னடியான், தாமரைத் திரு ஜெயா அருணாசலம், எழுத்தாளர் அனுராதா ரமணன் ஆகியப்பலரை நாங்கள் நேரில் சென்று பேட்டி எடுத்தோம். அத்தொகுப்பு அந்த ஆண்டு (1991) எங்கள் பள்ளியின் இதழில் (Voice of Vailankanni) வெளிவந்தது. இப்படி ஒரு வலுவான தலைப்பை கொடுத்து கவிஞர்களை, எழுத்தாளர்களை நாங்கள் பயப்படாமல் கேள்விகள் கேட்கவும், அதைத் தெளிவாக எழுதவும் வைத்தவர் ஆசிரியர் திரு.பெ.கி.பிரபாகரன் அவர்கள் தான். எங்களிடம் கொடுத்துவிட்டு அவரே எல்லாவற்றையும் செய்யவில்லை, பேட்டியெடுக்கும் போது எங்களை நம்பி தனியாக தான் விட்டார், நாங்கள் தான் கடைசிவரைக் கட்டுரையை எழுதி முடித்தோம் – இது எல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கையில் எவ்வளவு சிறந்த வாய்ப்பு, பயிற்சி என்று விளங்குகிறது. அத்தொகுப்பை சுமார் இருபது ஆண்டுகள் கழித்து உங்களுக்காக இப்போது வருடியில்(Scanner) வருடி இங்கே தந்துள்ளேன்.
(முழுக்கட்டுரையும் சுமார் பதினைந்துப் பக்கங்கள்)
Adobe Acrobat (PDF)ஆக தரமிறக்க இங்கே சொடுக்கவும்.