திரு.பத்ரி சேஷாத்ரி அவர்களின் வலைப்பூவில் படித்து விட்டு இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய மற்றுமொரு புத்தகம் – “இனி இது சேரி இல்லை”. சென்னையில் சேரியாய் இருந்த ஒரு இடத்தை எப்படி சென்னை விலிங்டன் கார்பரேட் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு சிறப்பாக மாற்றியமைத்தது என்பது தான் புத்தகம். நம் ஊரில் போதுவாக எப்போதுமே எதுவும் சரியாக செய்யவில்லை, ஏமாற்று வேலை என்பதைப் பற்றியே படித்து பழகிய நமக்கு இது ஒரு வித்தியாசமான புத்தகம் – எது நல்ல முறையில் தன்னார்வத்தில் வணிக நோக்கமின்றி நடைப்பெற்றது என்பதைப் பற்றி. வணிகரிதியாக அவ்வளவு வரவேற்பில்லாத இந்த மாதிரியான ஒரு தலைப்பை, தைரியமாக ஒருவித சமுக நலன் கருதி பதிப்பித்தற்கு நண்பர் திரு.பத்ரி அவர்களுக்கு தமிழ் வாசகர்கள் சார்பில் என் நன்றி.

சுத்தம், சுகாதாரம் மட்டுமில்லாமல் அரோக்கியம், வாழ்க்கை தரம், அடிப்படைக் கல்வி, சுயத் தொழில், குடிப்போதையில் இருந்து மீட்பு, முதியோர் கல்வி, சேமிப்பு – ஏமாற்று வட்டியிலிருந்து மீட்பு என்று பல வகையில் ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கையாக இதை நூலின் ஆசிரியர் திரு.பைரவன் அவர்களும் ஃபவுண்டேஷனின் திரு. நாராயணன் அவர்களும் செய்துள்ளார்கள். மிகவும் பாராட்ட வேண்டிய முயற்சி, தொடர வேண்டிய முயற்சி.

புத்தகம் ஒரு செய்தி தொகுப்பு என்ற முறையிலேயே பெருவாரியான பகுதியில் செல்கிறது. இதனால் படிக்கும் போதுப் பல இடங்களில் பொதுவான வாசகர்களுக்கு (என்னையும் உட்பட) ஒரு தொய்வு எற்படுவது உண்மை. தன்னார்வ நிறுவனத்தில் பணிபுரிவோர்களுக்கும், சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ள மாணவர்களுக்கும் இந்த புத்தகம் கண்டிப்பாக படித்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று என்றால் மிகையல்ல.

இனி இது சேரி இல்லை

இனி இது சேரி இல்லை

Tagged in:

,