மகிழ்நொடிகள்!
என்னதான் டிஜிட்டலாக அடிக்கடி தொடர்பில் இருந்தாலும், பேசிய குரலுக்கும் படித்த எழுத்துக்கும் சொந்தமான மனிதர்களை நேரில் பார்க்கும்போது வரும் நெருக்கமும் அன்பும் ஓர் அலாதி தருணம். அப்படியான தருணங்களை நேற்று உணர்ந்தேன்.
எனது இரண்டு தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் பணிகளுக்காகப் பலமுறை தொலைபேசியில் பேசியிருந்தாலும், ஜீரோ டிகிரி (Zero Degree) வித்யாவை நேற்றுதான் முதல்முறையாக நேரில் சந்தித்தேன். அதேபோலவே, சமூக வலைத்தளத்தில் பலமுறை உரையாடியிருந்தாலும், அவரின் எழுத்துகளை மெட்ராஸ் பேப்பரில் (Madras Paper) படித்திருந்தாலும், பேராசிரியர் கே.எஸ். குப்புசாமியை நேற்றுதான் நேரில் சந்தித்தேன்.
📷 முதல் படம்: எனது இரண்டு தமிழ் நூல்களையும் அன்புகொண்டு பதிப்பித்துள்ள ஜீரோ டிகிரி நிர்வாகத்தினர் ராம்ஜீயும், வித்யாவும்.
📷 இரண்டாவது படம்: மெட்ராஸ் பேப்பர் ஆசிரியரையும், அதன் சக எழுத்தாளர்களான கே.எஸ். குப்புசாமி, சிகரம் பாரதி ஆகியோரையும் சந்தித்தபோது.
🏪 இடம்: ஜீரோ டிகிரி அரங்கு F19, 2026 சென்னை புத்தகக் கண்காட்சி.


Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

