உங்களின் ஆதார் விவரங்களில் திருத்தம் செய்யவோ, உங்கள் பிள்ளைகளுக்குப் புதிய ஆதார் எடுக்கவோ இனி எங்கும் அலைய வேண்டாம். தற்போது நடைபெற்று வரும் 2026-ஆம் ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் செல்லவும். புத்தக அரங்குகளுக்கு வெளியே, உணவக வரிசையில் இந்திய அஞ்சல் துறையின் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கே அதிக நெரிசலின்றி உங்களின் ஆதார் சேவைகளை எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம். அஞ்சல் துறையே இதனை நேரடியாக வழங்குவதால், பாதுகாப்பைப் பற்றிப் பயம் தேவையில்லை. இந்த நன்முயற்சியைச் செய்துள்ள சென்னை அஞ்சல் துறைக்குப் பாராட்டுகள், நன்றி.
📍இடம்: புத்தகக் கண்காட்சி வளாகம் (உணவக வரிசைக்கு அருகில்), YMCA மைதானம், நந்தனம், சென்னை.
வழங்குபவர்கள்: இந்திய அஞ்சல் துறை (India Post) 📪.
சேவைகள்: ஆதார் விவரங்களில் திருத்தம் செய்தல் (பெயர், முகவரி, தொலைபேசி எண், படம், கைரேகை போன்றவை), குழந்தைகளுக்கான புதிய ஆதார் பதிவு.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

