இன்று கணித்தமிழ் சங்கம் தனது மாதக்கூட்டத்தை எங்கள் அலுவலகத்தில் (விஷ்வக் ஸொல்யுஷண்ஸில்) நடத்தியது. கூட்டத்தில் தே.மு.தி.க சட்டமன்ற உறுப்பினரும், மாஃபாய் நிறுவனருமான திரு.கே.பாண்டியராஜன் சிறப்புரையாற்றினார். தமிழக மாணவர்களிடம் கணினி தேர்ச்சியின் அவசியத்தை சிறப்பாக எடுத்துரைத்தார். உறுப்பினரின் பலப்பல கேள்விகளுக்கு அழகாகவும் பொறுமையோடும் பதிலளித்தார். அவருக்கு நன்றிகள்.