இப்புத்தகத்தின் வலைப்பக்கம் இப்படி தான் தன்னை அறிமுகம் செய்கிறது “உண்மையில் ஒருவருக்கும் பாலியல் தொழில் செய்கிற பெண்களின் வலி புரிவதில்லை. “என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?” இது வழக்கமாக வாடிக்கையாளர்களில் பாதிப் பேர் கேட்கிற வாசகம். எல்லாமே அந்தப் பத்து நிமிட மயக்கத்துக்கு மட்டுமான பரிவால் வருவது. இது கலைவாணியின் துயரம் நிரம்பிய சுயசரிதை. உயிர்த்துடிப்பு மிகுந்த எளிமையான வரிகளால் இதயத்தை உலுக்கிவிடுகிறார். இந்நூலைப் படிக்கும் யாரும், வயிற்றுப் பிழைப்புக்காக தெருவோரமாக நிற்கும் ஒரு பாலியல் தொழிலாளியை, இனிமேல் மரியாதைக் குறைவாகப் பார்க்க மாட்டார்கள், பார்க்க முடியாது”

இது சென்ற ஆண்டு சென்னை புத்தகக்காட்சியில் நான் வாங்கிய புத்தகம். எப்படி இருக்குமோ என்று தயக்கத்துடன் தான் வாங்கினேன்.  (உண்மை) கதை என்பதால் சன் டிவியின் ‘நிஜம்’ போல மொக்கையாக இருக்கும் என்று சந்தேகத்தோடு படிக்க தொடங்கினேன். புத்தகத்தை படிக்க அரம்பித்து சில மணி நேரங்களிலேயே முடித்தும் விட்டேன். அந்த அளவுக்கு எளிமையான, சீரான நடையில் நல்ல சுவாரஸ்யமான ஒரு தொடக்கத்தோடு எழுதியுள்ளார் ஜோதி நரசிம்மன். இந்த அளவுக்கு ஒரு உண்மை கதையை அதுவும் தன் சொந்த கதையை, வெளிப்படையாக சமுதாயம் என்ன சொல்லுமோ என்று தயங்காமல் எழுதிய கலைவாணி அவர்களுக்கு வாசகர்களின் சார்ப்பில் என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.  பாலியல் பற்றி புத்தகமாக இருந்தாலும், ஆபாச வர்ணனைகளோ, கதையின் ஓட்டத்திற்கு, நடக்கும் வாழ்வின் நிகழ்வுக்கு தேவையில்லாத எதுவும் இல்லை.

கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம் என்று சொல்ல முடியாது, ஆனாலும் தமிழில் இது ஒரு நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.

Categorized in:

Tagged in:

,