Archive

Interviews for our School journal for SAARC Women Children year – 1991

இன்று தமிழ் ஆசிரியர் திரு.பெ.கி.பிரபாகரன் ஐயா அவர்களைப் பார்த்தப் போது தான் அவரின் தூண்டுதலில் நாங்கள் பதினொன்றாம் வகுப்பில் எடுத்தப் பேட்டி பள்ளி இதழில் வந்தது நினைவிற்கு வந்தது. அதை தேடி எடுத்தேன்.

இப்போது தான் மத்திய அரசில் பெண்கள் இட ஒதுக்கீடு என்று பேசுகிறார்கள், ஆனால் சார்க் நாடுகள் 1991ம் ஆண்டே பெண் குழங்தைகள் ஆண்டாக அறிவித்திருந்தது. இதைப் பற்றி மக்கள் சமுதாயத்திற்காகப் பாடுபடும் நல்லோர்களின் கருத்தையறிய முற்பட்டோம். எங்கள் பள்ளி செயலாளர், முதல்வர், கவிஞர் பொன்னடியான், தாமரைத் திரு ஜெயா அருணாசலம், எழுத்தாளர் அனுராதா ரமணன் ஆகியப்பலரை நாங்கள் நேரில் சென்று பேட்டி எடுத்தோம். அத்தொகுப்பு அந்த ஆண்டு (1991) எங்கள் பள்ளியின் இதழில் (Voice of Vailankanni) வெளிவந்தது. இப்படி ஒரு வலுவான தலைப்பை கொடுத்து கவிஞர்களை, எழுத்தாளர்களை நாங்கள் பயப்படாமல் கேள்விகள் கேட்கவும், அதைத் தெளிவாக எழுதவும் வைத்தவர் ஆசிரியர் திரு.பெ.கி.பிரபாகரன் அவர்கள் தான். எங்களிடம் கொடுத்துவிட்டு அவரே எல்லாவற்றையும் செய்யவில்லை, பேட்டியெடுக்கும் போது எங்களை நம்பி தனியாக தான் விட்டார், நாங்கள் தான் கடைசிவரைக் கட்டுரையை எழுதி முடித்தோம் – இது எல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கையில் எவ்வளவு சிறந்த வாய்ப்பு, பயிற்சி என்று விளங்குகிறது. அத்தொகுப்பை சுமார் இருபது ஆண்டுகள் கழித்து உங்களுக்காக இப்போது வருடியில்(Scanner) வருடி இங்கே தந்துள்ளேன்.

Freedom for Women 1991 - Voice of Vailankanni School
(முழுக்கட்டுரையும் சுமார் பதினைந்துப் பக்கங்கள்)

Adobe Acrobat (PDF)ஆக தரமிறக்க இங்கே சொடுக்கவும்.

Met my Tamil teacher Mr.Pe.Ki.Prabhakaran after two decades

ஆங்கிலம் வழியாகவே முழுவதும் நான் கல்விக் கற்றாலும், எனக்கு ஓர் அளவிற்கு தமிழின் மேல் ஆர்வம் இருக்கிறது என்றால் அதற்கு முழுக்காரணம் என் மதிப்பிற்குரிய தமிழ் ஆசிரியர் (முகம்) திரு.பெ.கி.பிரபாகரன் ஐயா அவர்கள் தான்.

தி.நகரில் உள்ள சி.பி.எஸ்.இ. (C.B.S.E) பள்ளியான வேளாங்கன்னி மேல்நிலைப் பள்ளியில் (Shrine Vailankanni Senior Secondary School T.Nagar) தான் என் முழு பள்ளிப்படிப்பையும் படித்தேன் (L.K.G. to 12th standard). அப்போது எங்களுக்கு ஐந்து ஆண்டுகள் (7,9,10,11,12th Standard) தமிழ் ஆசிரியராக இருந்தவர் திரு.பெ.கி.பிரபாகரன் அவர்கள்.

பள்ளிப் படிப்பை முடித்தப்பின்(1992) ஒரிரு ஆண்டுகள் கழித்து ஐயாவை சந்தித்தோடு சரி, மீண்டும் இன்று தான் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரின் வீட்டில் (பரிதி நிலையம், 1368, ஆறாவது செக்டர், 31ஆவது தெரு, சென்னை-600078) இன்று நானும் என் பள்ளித் தோழன் கோ.மணிகண்டனும் சேர்ந்து போய் பார்த்தோம். நலம் விசாரித்தோம், பழைய கதைகள் பேசினோம். அவருக்கு நான் எங்கள் லிப்கோ நிறுவனத்தின் பேரகராதி ஒன்றைக் கொடுத்தேன், ஐயா எங்களுக்கு அவரின் “மனத்தை விட்டகலாத கவிஞர்கள்” புத்தகத்தைப் அன்பளிப்பாகக் கொடுத்தார். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

Visit to Thiru Pe.Ki.Prabharakaran House 21March2010

திரு.பெ.கி.பிரபாகரன் ஐயா இல்லம்

1990ல் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் எனது ஆட்டோகிராப் புத்தகத்தில் ஐயா எழுதிக் கொடுத்ததை இன்று கண்டுப்பிடித்து படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது நெகிழ்ச்சியான நிகழ்வு.

1990 Pe.Ki.Prabhakaran Aiya in my autograph book

Down the memory lane: High School Prizes

Today my mother while cleaning her book shelf, found few of my envelopes. They were from my High School days. One was Rs.51 Cash Prize I won in Twelfth Standard for “Most Deserving Student of the High School”. The other was a First Prize with Rs.150 for “Best Speaker” in a debate competition – I am trying to recollect whether this was in any Inter School or Intra School event. Going back nearly two decades is quite challenging, but nevertheless seeing the prizes feels good.

Venkatarangan - High School 12 Standard Prizes